Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: ராஜயோக இயற்கை மருத்துவம் மருத்துவமனை மற்றும் ஆன்மீக மையம் நிறுவனர் சித்தர் தவத்திரு ராஜயோக ஸ்வாமிகள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாகளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சசிகலா தலைமையில் அகில இந்திய அண்ணா திமுக தேர்தலை சந்தித்தால் மீண்டும் ஆட்சி அமைக்கும் . மேலும் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் அவசரமாக உலகத்தை ஒட்டி செல்வதால் தங்களை தற்காத்துக் கொள்ள மறந்துவிட்டனர். பயம் ஒன்றே நோய்க்கு காரணம். நம்உடல் நாம் சொல்வதை கேட்கவேண்டும். மருந்து மாத்திரைகள் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல.
உடலில் கழிவுகள் சேர்வதே நோய்க்கு காரணம். ஆகவே மாதம் ஒருமுறை உடலின் கழிவுகளை வெளியேற்றுவது சிறந்தது. தற்போதைய சூழலில் பரவிவரும் பல்வேறு நோய் பயம் மக்களிடையே இருக்கிறது. இதில் இருந்து மக்களை காக்க 18 சித்தர்கள் சொன்ன பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளில் ஆன்மிகம், அறிவியல், மருத்துவம் ஆகியவை சார்ந்து வாழ்வியலோடு ஒன்று சேர்ந்து வாழ, மக்களுக்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் செயல்பட்டு வருகிறேன்.
ஆன்மீக அரசியல் ஒரு பிரச்சனைக்கு முடிவு காண்பது ஆகும். பிரச்சனையை வளர்ப்பது அல்ல. வருகின்ற தேர்தலில் அகில இந்திய அதிமுக சின்னம்மா தலைமையில் தேர்தலை சந்தித்தால் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்